Thursday, December 2, 2010

"நீதியை கோரும் பாபரி மஸ்ஜித் " - விழிப்புணர்வு பிரச்சாரம்!





பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6 முதல் காந்தி கொலை செயயப்பட்ட தினமான ஜனவரி 30 வரை "நீதியை கோரும் பாபரி மஸ்ஜித் " என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தீர்மானித்துள்ளது .

இது தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இன்று 14/11/2010 வெளியிட்ட அறிக்கையில் மகாத்மா காந்தி படுகொலை, பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்டத்தின் மூலம் நாட்டின் மதசார்பற்ற கட்டமைப்பை தகர்த்தது போன்ற பல குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும் என்றும்

டிசம்பர் 10 தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்புகளில் ஆர் எஸ் எஸ் இன் தொடர்பு அம்பலமாகிக்கொண்டிருக்கும் நிலையில் சோனியா காந்தி குறித்து அநாகரிகமான முறையில் பேசிய முன்னாள் RSS தலைவரின் பேச்சை வன்மையாக கண்டித்துள்ளது. இது ஊடகங்களையும் மக்களையும் திசைதிருப்பும் கேவலமான யுக்தி என்று வர்ணித்துள்ளது .

1992 முதல் நடைபெற்ற அனைத்து குண்டு வெடிப்புகளில் ஆர் எஸ் எஸ் இன் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்துள்ளது .



ஆல் இந்தியா இமாம்'ஸ் கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம்!




டிசம்பர்-6: தொடர் முழக்க போராட்டம் -த.மு.மு.க. அறிவிப்பு!



பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலை நகர்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக வழிபாட்டு உரிமையை மீட்கவும் லிபரான் கமிஷன் குற்றம் சுமத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடர் முழக்க போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.


பாபரி மஸ்ஜித் தீர்ப்பு:உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் முடிவு!

பெங்களூர்,நவ.2:பாப்ரி மஸ்ஜித் நில உரிமை வழக்கில் கட்சிதாரராக இணைந்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுச் செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது.

பெங்களூரில் கடந்த அக்டோபர் 30,31 தேதிகளில் கூடிய தேசிய செயற்குழுக் கூட்டத்தில் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் லீகல் மானிட்டரிங் செல் (சட்டநடவடிக்கை கண்காணிப்பு பிரிவு) ஒன்றை உருவாக்கியுள்ளது.

அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பு அநீதியும், முன்னரே திட்டமிட்டதும், சட்டத்திற்கு புறம்பானதுமாகும் என பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழுக் கூட்டம் கருத்து தெரிவித்துள்ளது. ஹிந்தத்துவா அமைப்புகளின் வகுப்புவாதவெறி பிரச்சாரங்களை ஒப்புக்கொள்கிறது இத்தீர்ப்பு. இந்தியாவின் மதசார்பற்றக் கொள்கையின் மீதான மிகவும் அநீதியான தாக்குதல்தான் பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட நிகழ்வு.

தேசம் முழுவதும் இதற்கு நீதியை எதிர்பார்த்திருந்த பொழுதிலும் நீதி என்பது தற்பொழுதும் எட்டாக்கனியாகவே உள்ளது.

பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதிக்கான போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் எப்பொழுதுமே முன்னணியில் இருந்துள்ளது. புதிய சூழலில் வருகிற டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதங்களில் பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையைக் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்காக தேசிய அளவில் பிரச்சார நிகழ்ச்சிகள் ஏற்பாடுச்செய்ய பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழு தீர்மானித்துள்ளது.



No comments: